சிவகாசி அருகே அரசு பள்ளியில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பபு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை (42). இந்நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்பாக படிக்க சொல்லி மாணவ, மாணவியரிடையே கண்டிப்புடன் ஆசிரியர் கடற்கரை நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து, காலை நேர இடைவேளை நேரத்தில் வீட்டிற்குச் சென்ற அதே வகுப்பைச் சேர்ந்த முகேஷ் மற்றும் யோகேஷ் ஆகிய இரு மாணவர்களும், அங்கிருந்து கத்தி மற்றும் அருவாளுடன் பள்ளிக்கு வந்து அங்கு ஓய்வறையில் இருந்த ஆசிரியர் கடற்கரையை பின்பக்க தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த ஆசிரியர் கடற்கரை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இந்த இரு மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து தனித்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை வெட்டிச் சென்ற மாணவர்களை தேடி வந்த நிலையில் பெரியார் காலனி பகுதியில் முட்புதரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.