தமிழகம்

தீர்த்தம் குடித்த சாமியார் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திகிலூட்டும் பின்னணி!

விழுப்புரத்தில், கடன் தொல்லையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், தனது நண்பரின் குடும்பத்தையும் கொல்ல முயன்ற சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விழுப்புரம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (45). இவர் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள அம்மகளத்தூர் என்ற கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (61) என்பவருக்கும், முரளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நல்ல நண்பர்களாகி உள்ளனர். இதனால், கணேசன் வீட்டிலேயே முரளி பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள மக்களுக்கும் குறிசொல்லி வந்துள்ளார். இவரது உதவியாளராக ராமமூர்த்தி (32) என்பவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கோயில் செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்களிடம் பல லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படவே, முரளியிடம் கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு வந்து உள்ளார்.

இதனால், முரளி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதன்படி, மார்கழி வெள்ளியான நேற்று அதிகாலை, குடியிருப்பு அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்துவிட்டு வீடு திரும்பிய முரளி, ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த விஷத்தன்மை கொண்ட பவுடரை தண்ணீரில் கலந்து முதலில் தானே குடித்துள்ளார்.

பின்னர் அதனை சாமி தீர்த்தம் எனக் கூறி உதவியாளர் ராமமூர்த்தி, நண்பர் கணேசன், அவரது மனைவி ராஜாம்மாள் (60), மகன்கள் முத்தையன் (40) மற்றும் கண்ணன் (32) ஆகிய 5 பேரையும் எழுப்பி குடிக்க கொடுத்துள்ளார். அவர்களும் தீர்த்தம் என நம்பி குடித்துள்ளனர்.

பின்னர் 6 பேரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: மேல்மருத்துவத்தூர் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து இளம் பக்தை பலி.. ஆற்காடு அருகே சோகம்!

அங்கு 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார், முரளியிடம் விசாரணை நடத்தினர். நடந்ததைக் கூறிய முரளி, கடன் தொடர்பாக தனது உதவியாளர், நண்பர் கணேசனின் குடும்பத்தினரையும் கடன்காரர்கள் தொல்லை செய்வார்கள் என்பதால், அவர்களுக்கும் விஷம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, முரளி மீது கொலை முயற்சி (307) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம், விஷம் குடித்தவர்களில் 4 பேர் அபாய நிலையை கடந்துவிட்டதாகவும், மற்ற 2 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

16 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

17 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

17 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

17 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

17 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

18 hours ago

This website uses cookies.