சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டடுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற நகரங்களை விட கோவை மாநகரில் பணிகள் சிறப்பாக இருக்கிறது. Build environment பிரிவில் உக்கடம் வாலாங்குளம், டிபி ரோடு பகுதியில் மாடல் ரோடு பணிகளுக்காக தேசிய அளவில் முதலிடம் கோவை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது.
இது தவிர தென்னிந்திய அளவில் சிறந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் கோவை மாநகராட்சி தேர்வாகி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று நடந்த விழாவில் மாண்புமிகு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், கோவை மாநகராட்சிக்கு பெருமைக்குரிய விருதை வழங்கி கவுரவித்து உள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் நமது துணை கமிஷனர் சிவகுமார் விருதை பெற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சிக்கு இது பெருமைமிகு அடையாளமாக இருக்கிறது.
கோவை மாநகராட்சிக்காக கேசிபி இன்ஃபரா லிமிடெட் நிறுவனம் இந்தப் பணிகளை செய்துள்ளது. கேசிபி இன்ஃபரா நிறுவனத்தின் பெருமைமிகு திட்டப்பணியாக பெரிய mile stone ஆக இது அமைந்துள்ளது.
கேசிபி இன்பரா நிறுவனம் டிபி ரோடு கிளாக் டவர், உக்கடம் ஐ லவ் கோவை, ரேஸ்கோர்ஸ் மீடியா டவர், தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை போன்றவற்றை வடிவமைத்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.