கோவை: கோவையில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த டிவி மற்றும் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த விலை உயர்த்த டிவி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கோவை மாதம்பட்டி அடுத்த செல்லப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிபிரசாத், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறது. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சுந்தரமும் தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் முன்கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் ஹரிபிரசாத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மாலை வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த சோனி டிவி மற்றும் 2 பவுன் நகை 15 ஆயிரம் ரொக்கம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயவியல் துறையினர் பீரோ கதவு போன்ற இடங்களில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.