நூதன முறையில் மதுபானம் கடத்தல்.. வாகனத்தை சோதனையிட்ட போலீசார் ஷாக் : 3 ஆயிரம் மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது!!
விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன் மற்றும் போலீசார் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் பூத்தமேடு சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அதன் பின்புறத்தில் பயன்படுத்தப்பட்ட இளநீர் கழிவுகள் இருந்தது.
இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த இளநீர் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தபோது அதன் அடிப்புறத்தில் அட்டைப்பெட்டிகளில் 3000 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வி.மருதூரைச் சேர்ந்த பரத் (வயது 21), விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணுதேவ் (23) என்பதும், அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பரத், விஷ்ணுதேவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.