தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கடந்த ஜூலை 7 அன்று ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், கலைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வன அலுவலர்களுக்கு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வன காவலர் லட்சுமணன் ஆகியோர் கோவில் திருவிழா நடந்த வன அலுவலர்கள் எஸ் குமாராபுரத்தில் உள்ள கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் ராஜேஷ் குமார் (46) என தெரிய வந்தது. இதை அடுத்து வனத்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர் செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும், கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய பிறகு மீண்டும் காட்டுப் பகுதிக்குள் பாம்புகளை விட்டு விடுவதாக ராஜேஷ் குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.