கோவையில் ஓ.பி.சி.கூட்டமைப்பு, அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழக முதல்வரின் 69 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,ஓ.பி.சி.கூட்டமைப்பு,அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா டவுன் ஹால் பகுதியில் உள்ள க்ரீன் ஓட்டல் வளாக அரங்கில் நடைபெற்றது.
ஓ.பி.சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.முகம்மது ரபீக் ஒருங்கிணைத்த விழாவில்,பெண் தொழில் முனைவோர் தலைமை பயிற்சியாளர்கள் சபுரா,மரகதம்,ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பி.சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கோவை பாபு,எம்.பி.சி கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ராம வெங்கடேசன்,ஓ.பி.சி.கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் சூலூர் சந்திரசேகரன் தங்கப்பழம் வழக்கறிஞர் வெண்மணி, மதிவாணன், ரவிக்குமார், கா.சு. நாகராசன், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கரிகாலன், ஜான் வில்லியம்ஸ், லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் விதமாக நடைபெற்ற இதில், உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த 45 பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து வருமானத்தில் பின் தங்கிய மூன்று பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் பேசுகையில்,பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கி சுய தொழிலில் முன்னனி நிறுவனங்களுக்கும் சவால் விடும் வகையில்,பெண்களை உருவாக்கி வருவதாகவும்,தற்போது அனைத்து மாவட்டங்களில் இவ்வாறான சுய தொழில் முனைவோர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, தனி சொசைட்டி வாயிலாக அரசே கொள்முதல் செய்து,நேரடி விற்பனை நிலையங்களை உருவாக்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் அறிமுகப்படுத்திய மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுயதொழில் முனைவோரான பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.