சென்னை : புளியந்தோப்பு அருகே குடோனில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த கலைமணி(45) என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பெரும்பாலான கடைகளுக்கு குளிர் பானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள குளிர்பானங்கள் காலாவதி ஆகி இருப்பதாகவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து அவரது தலைமையில் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ஜெயகோபால் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் பேசுகையில்,” இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் காலாவதி ஆன நிலையில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிய வந்ததாகவும், அதை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைத்து உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.