தமிழகம்

உல்லாசமா இருக்கலாம் வா.. வற்புறுத்திய கள்ளக்காதலன் : தனியாக நடந்த சந்திப்பு.. உள்ளே புகுந்த இளைஞர்!

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 45) இவரது கணவர் சேட்டு இந்த தம்பதியருக்கு இந்து குமார் என்கின்ற மகன் உள்ளளர்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஜெயாவின் கணவர் சேட்டு இறந்த நிலையில் ஜெயா மற்றும் அவரது மகன் இந்து குமார் (வயது 22) உடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் அதே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 35) உடன் ஜெயாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க: படுக்கையில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்… ஜன்னல் வழியாக பார்த்த கணவன் : டுவிஸ்ட்!

ஜெயாவின் மகன் இந்து குமார் வளர வளர தனது தாயுடனான கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை ஐயப்பனிடமும் கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி எச்சரித்து வந்ததாகவும் இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயாவுடன் கள்ளக்காதலை முறித்துக் கொள்ள மறுத்த நிலையில் ஐயப்பனை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலி ஜெயாவும் அவரது மகன் இந்துகுமாரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

வழக்கம்போல் (10.05.2025) நேற்று இரவு ஜெயா புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஐயப்பனை வரவழைத்துள்ளார்.

இந்த நிலையில் அங்கே ஏற்கனவே பதுங்கி இருந்த ஜெயாவின் மகன் இந்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ஐயப்பனின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஐயப்பன் துடிதுடித்துள்ளார். ஆத்திரமடங்காத கள்ளக்காதலி ஜெயா ஐயப்பனின் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் கல்லால் நசுக்கி துடிக்க துடிக்க கொலை செய்து லட்சுமிபுரம் பகுதியில் ஜெயா புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் பகுதியில் சடலத்தை வீசிவிட்டு ஒன்றுமே நடக்காததை போல் தாயும் மகனும் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து சடலத்தை கண்ட பகுதி மக்கள் உடனடியாக திருவலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி பழனி காவல் ஆய்வாளர்கள் கருணா முரளிதரன் உதவி ஆய்வாளர்கள் தர்மன் மணிகண்டன் ஆதர்ஷ் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஐயப்பனின் கள்ளக்காதலி ஜெயா மற்றும் அவரது மகன் இந்துக்குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாயும் மகனும் சேர்த்துக்கொண்டு திட்டம் தீட்டி ஐயப்பனை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தாய் மகன் இருவரை கைது செய்து திருவலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை போன்று பார்க்க வேண்டிய பெண்ணிடம் வயதுக்கு மீறிய உறவு வைத்துக் கொண்டதால் பரிபோன விவசாயின் உயிர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரதீப் ரங்கநாதன் பட தலைப்புக்கு வந்த சிக்கல்? ஸ்டார்ட்டிங்லயே End Card போட்டாங்களே?

வளர்ந்து வரும் ஹீரோ “லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட்…

2 hours ago

நந்தினி வீசிய வலை… ஓடிப்போய் கல்யாணம் செய்த 28 வயது டாக்டர் : ரூ.5 லட்சம் அபேஸ்!

தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…

2 hours ago

இளைஞரை வழிமறித்து தாக்கிய போதை கும்பல்.. முகத்தை கல்லால் தாக்கி சிதைத்த அதிர்ச்சி காட்சி!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…

3 hours ago

பழைய கோபத்தை மனசுல வச்சிக்கிட்டு? ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு சிம்பு வராததுக்கு காரணம்?

சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி…

3 hours ago

செல்லூர் ராஜூ எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யணும்.. அவருக்கு எதிரா ஓட்டு போடுவோம் : முன்னாள் கர்னல் பேட்டி!

தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…

3 hours ago

கூட்டணி தொடர்பாக தவெகவுடன் பேச்சுவார்த்தை? சஸ்பென்சை உடைத்த விஜய பிரபாகரன்!

புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம்…

5 hours ago

This website uses cookies.