சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர்கள் முரளிதரன் (65) – ரோகிணி தம்பதி. இவர்களுக்கு பிரசன்னா வெங்கடேசன் (30) மற்றும் ஆதித்ய நாராயணன் (28) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், தந்தை முரளிதரன் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளைய மகன் ஆதித்ய நாராயணனுக்கு சற்று மன நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தந்தை – மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை – மகனுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயணன், கத்திரிக்கோலால் தந்தையின் கழுத்தில் குத்தியதில் முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், ஆதித்ய நாராயணன் ரத்தக் கறை படித்த உடையுடன், தாய் ரோகிணியை அழைத்துக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்க, அதே பகுதி வழியாகச் சென்ற ஆட்டோவை மறித்து ஏறியுள்ளார்.
இவ்வாறு தாயும், மகனும் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக்குக்கு (25) சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும், திருவல்லிக்கேணி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ஆதித்ய நாராயணன் தனது சகோதரரை போனில் அழைத்து, “தந்தையைக் கொலை செய்து விட்டேன். நீ சென்று பார்த்து இறுதிச் சடங்கை முடித்துவிடு” எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக், நேராக ஆட்டோவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் ஒட்டிச் சென்றுள்ளார்.அங்கு ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது தாயை போலீஸசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஆதித்ய நாராயணன் அவரது தந்தையைக் கொலை செய்துவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தேவையில்லாத கேள்வியை கேட்காதீங்க.. நிருபர்களிடம் இளையராஜா ஆவேசம்!
இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் ஆதம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் வெகுவாகப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் போலீசார் முரளிதரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.