வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரோடு அவரது மகள் ராதிகா – திருவள்ளூரை சேர்ந்த மருமகன் சாம் ஜெபதுரை ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகள் மற்றும் தந்தை சென்னையில் திருமணத்திற்க்காக சென்று திரும்பி வந்து பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 57 சவரன் தங்க நகைகளய் திருடி போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமனின் மருமகன் சாம் ஜெபதுரை, திருவள்ளூரை சேர்ந்த அவரது கூட்டாளி உசேன் என்பவனுடன் சேர்ந்து மாமனாரது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இதனை எடுத்து தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த மருமகன் சாம் ஜெபதுரை அவனது கூட்டாளி உசேன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.