தமிழகம்

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் மல்லாங்கிணறு அடுத்த கீழத்துலுக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35 ). இவர் பி.எட் முடித்துள்ளார். இந்த நிலையில், இவர் அந்த ஊரின் காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், கத்திக்குத்து காயங்களுடன் கீழே கிடந்துள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், படுகாயத்துடன் கிடந்த ராஜேந்திரனை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராஜேந்திரனுக்கு திருமணமாகி 3 நாட்களில் அவரது மனைவி பிரிந்து சென்று விவாகரத்து ஆகியுள்ளது. அதேநேரம், அதே ஊரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.

இவர் கணவரை இழந்த நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராஜேந்திரனும், மகாலட்சுமியும் தொடர்பில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை, மகாலட்சுமியின் மகன் பிரபாகரன் (19) அறிந்துள்ளார். எனவே, ராஜேந்திரனை பல முறை பிரபாகரன் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

ஆனால், இதனை ஏற்க மறுத்த இருவரும் தங்களது உறவைத் தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது பள்ளி நண்பரான மல்லாங்கிணறு வி.வி.வி நகரைச் சேர்ந்த ராஜா (19) என்பவரும் சேர்ந்து, நேற்று கீழத்துலுக்கன்குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை கத்தியால் பல இடங்களில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தலைமறைவான பிரபாகரன் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் அருப்புக்கோட்டை ஏஎஸ்பி மதிவாணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

17 minutes ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

This website uses cookies.