ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயை மதுபோதையில் கற்பழித்து கொன்ற முன்னாள் காவலரை ஆற்காடு கிராமிய போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷ்(32). பிரியங்கா என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், கடந்த ஆண்டு நன்னடத்தை இல்லாத காரணத்தினால் காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சொந்த ஊரில் வசித்து வந்த போது மது அருந்திவிட்டு தனது தாயிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தாய் கடந்த இரு தினங்களாக செல்போன் பேசாததால் தான் சந்தேகமடைந்த மகள் பிரியா, சந்தேகமடைந்து வீட்டில் சென்று பார்த்த போது தாய் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு கிராமிய போலீசார், உயிரிழந்த வாணிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் தனியாக இருந்த முன்னாள் காவலரான மகன் தினேஷை கைது செய்து விசாரணைக்காக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தனது தாயை மது போதையில் கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மது போதையில் தாய் என்றும் பாராமல் போதையின் உச்சத்தில் கற்பழித்து மகனே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை தனது தாயிடம் மனைவியை சேர்த்து வைக்க சொல்லி சண்டையிட்டு வந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து வைக்காத வருத்தத்தில் மகன் மது போதையில் தாயை கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.