மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரே அமர வைக்க இந்த அரசருக்கு மனமில்லை.
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கிய எண்ணிக்கை கோரிக்கை குறித்த கேள்விக்கு:
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள். விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார்.
மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது அதுதான் உண்மை. பாஜக ஆயுட்காலம் இந்த முறை பிகார் தேர்தலில் முடிந்து விடும். இந்தியா கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமையும்.
நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது குறித்த கேள்விக்கு : எப்போது பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. பலமான நாடு பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு தலை குனிய வேண்டும்.
விஜயகாந்த் இருக்கும் பொழுது தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வி தழுவி இருக்கிறார்கள்.
பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு: தமிழக அரசியலில் 20 சதவீதம் வாக்குகள் அதிமுக திமுகவுக்கு எதிராக இருக்கும் 70 சதவீத வாக்குகள் அதிமுகவா, திமுகவா என்று இருக்கும். பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும். திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் பாஜகவின் வளர்ச்சி பெரிதாக இல்லை.
ராகுல் காந்தி செல்லூர் ராஜு ராகுல் காந்தி குறித்து பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு:
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ளை மனம் படைத்தவர். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
விருதுநகர் தொகுதிக்கான முக்கிய திட்டங்கள் குறித்த கேள்விக்கு:
விருதுநகர் தொகுதியை பொருத்தவரை மதுரை விமான நிலையம் கையகப்படுத்துவது கூடுதலா பாதையை விரிவாக்கம் செய்வது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் முடிக்கப்பட வேண்டும். ரயில்வே துறையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கப்பட வேண்டும் திருமங்கலம் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். கைவிடப்பட்ட மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விருதுநகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றி.
நட்சத்திரத் தொகுதி குறித்த கேள்விக்கு:
சென்னையில் இருந்த நட்சத்திரங்கள் இரவு வரும் போது எப்படி வானத்தில் நட்சத்திரம் தோன்றுமோ அதேபோல் விருதுநகர் தொகுதிக்கு வந்திருந்தார்கள். பகல் வந்ததும் நட்சத்திரம் எப்படி மறையுமோ அதேபோல் போட்டியிட்ட நட்சத்திரங்கள் தற்போது சென்னை சென்றிருக்கிறது என கூறினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.