Categories: தமிழகம்

உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டு தர வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

திருப்பூர் : உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள சூழ்நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர் .

குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அந்த வகையில் திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த இந்திராணி பன்னீர்செல்வம் தம்பதியினரின் மூத்த மகன் அரவிந்த் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கூடிய சூழ்நிலையில் போர் துவங்குவதற்கு முன்பாகவே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் போர் தொடங்கி விட்டதால் டிக்கெட் ரத்தாகியிருப்பதாகவும் , தற்போது விடுதியில் உள்ள பாதாள அறைகளில் தங்கி இருப்பதாகவும் உணவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் போர் தீவிரமாகும் முன்பாக தங்கள் மகனை மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இன்று மனு அளித்தனர்.

இதேபோல் திருப்பூர் குமார் நகர் பகுதியை சேர்ந்த வாசு – சித்ரா தம்பதியினரின் மகன் முத்தையாலு சபரிஷ் அதே கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருவதாகவும் தங்கள் மகனையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொலைபேசி வாயிலாக நமது செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு மாணவர்களும் தற்போது வரை அப்பகுதியில் பதற்றம் மிக அதிக அளவில் இல்லை எனவும் தொடர்ந்து தூரத்தில் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தாங்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும் தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.