Categories: தமிழகம்

நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன்5) இரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார்.

அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பயணி நாங்குநேரிக்கு போகாதது குறித்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் கேட்கும் போது சபாநாயகர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து செல்ல வேண்டாம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாங்குநேரி ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் தாலுகாவின் தலைநகராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் காவல் நிலையம் மருத்துவமனை என பல்வேறு சேவைகளுக்கு நாங்குநேரி வட்டாரம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகள் வழியில் உள்ள முக்கிய ஊரான நாங்குநேரிக்குள் செல்லாமல் பல நேரங்களில் புறவழிச் சலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் அதனை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் பெற்ற சிறப்பு உத்தரவு இருந்தும் அதனை மதிக்காத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் ஊழியர்களும் சட்ட விரோதமாக அரசு பேருந்துகளை புறவழிச் சாலையில் இயக்கி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் எம்எல்ஏ எம்பிக்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என கூறும் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் சபாநாயகர் அப்பாவுவை தொடர்புபடுத்தி நெல்லையில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அரசு பேருந்து செல்ல வேண்டாம் என கூறியதாக வெளியான வீடியோ தகவலால் நாங்குநேரி தொகுதி வாழ் மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.

கடந்த வாரம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது தமிழகம் முழுவதும் வரிந்து கட்டிக் கொண்டு நடவடிக்கையில் இறங்கிய போலீசார் பின் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் போக்குவரத்து துறையினரோடு சமாதானமாகினர்.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தினரின் சட்டவிரோத செயல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத் தக்கது.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக முறையாக இயங்குவதை கண்காணிக்க வேண்டிய காவல்துறையினர் சட்டத்தை பின்பற்றி நடைமுறைப்படுத்தாமல்கண்மூடித்தனமாக இருப்பதால் அரசு பேருந்துகள் ஊழியர்களின் இஷ்டத்திற்கு இயங்குகின்றன.

மேலும் கடந்த மாதம் 19ஆம் தேதி இதே பேருந்தின் நடத்துனர் வள்ளியூர் போக மாட்டேன் என கூறி தகராறில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.