ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை : கீழ நான்காம் வீதியில் சவர்மா கடையில் சவர்மா மற்றும் சிக்கன் ரோல் ஆகிய உணவுகளை நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் சாப்பிட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு சவர்மா மற்றும் சிக்கன் ரோல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 5 நபர்களுக்கும் இன்று அதிகாலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர்
ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் மாமிசங்கள் இருப்பது தெரியவந்தது. அதனை எடுத்து வந்து பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் விசாரணை செய்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு இரண்டு வருடமாக தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிப்பவர்கள் அதிக கலர் போடக்கூடாது ரசாயனம் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு நேர உணவுக் கடைகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகவும் தொடர்ந்து உணவகங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.