ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை : கீழ நான்காம் வீதியில் சவர்மா கடையில் சவர்மா மற்றும் சிக்கன் ரோல் ஆகிய உணவுகளை நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் சாப்பிட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு சவர்மா மற்றும் சிக்கன் ரோல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 5 நபர்களுக்கும் இன்று அதிகாலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர்
ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் மாமிசங்கள் இருப்பது தெரியவந்தது. அதனை எடுத்து வந்து பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் விசாரணை செய்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு இரண்டு வருடமாக தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிப்பவர்கள் அதிக கலர் போடக்கூடாது ரசாயனம் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு நேர உணவுக் கடைகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகவும் தொடர்ந்து உணவகங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.