ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலர் ஒருவரின் மகன், பட்டாக் கத்திகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் கொலை உள்ளிட்ட சில குற்றச் செயல்கள் நடக்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசியத் தகவலின் பேரில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது, ராமாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் ரோந்து சென்ற போது, கத்தியுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, போலீசாரைக் கண்டதும், அந்த நபர் தப்பியோடி உள்ளார். பின்னர், போலீசார் அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது, அங்கு இரண்டு பட்டா கத்திகள் கிடந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், தப்பியோடிய நபர், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் லில்லி என்பவரின் மகன் கோகுல்நாத் (24) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் நின்று கொண்டிருந்ததும், அவரின் வீட்டு அருகிலே என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சினேகாவின் துப்பட்டாவால் தீபக் செய்த காரியம்.. சிக்கிய பரபரப்பு கடிதம்!
இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அதில், மேலும் சில பட்டாக் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, தப்பியோடிய கோகுல்நாத்தை கைது செய்த கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.