தனி தீவு போல் மாறிய ஸ்ரீவைகுண்டம்… மக்கள் வெளியேற உத்தரவு : மீட்பு பணிகளில் களமிறங்கிய ஹெலிகாப்டர்!
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணிஆற்றை ஒட்டியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன,. செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் உடனடியாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருவதால் ஹெலிகாட்பர் மூலம் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தனித்தீவு போல ஸ்ரீவைகுண்டம் காட்சியளிப்பதால் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.