தமிழகம்

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும் கோபத்தில் பதிலளித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

2025 ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்டீபன் பிளெமிங் கலந்து கொண்டார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் “முதல் போட்டியில் 156 என்ற இலக்கை 20 ஓவர்கள் முழுவதும் பயன்படுத்தி சேஸிங் செய்தீர்கள்.இன்றைய போட்டியில் 146 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறீர்கள்.இது உங்கள் அணியின் கிரிக்கெட் ஆட்டபோக்கு என தெரிகிறது.ஆனால் இது ஒரு பழைய முறை அல்லவா?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டவுடன் ஸ்டீபன் பிளெமிங் வெளிப்படையாகக் கோபம் கொண்டார்.அவர் “என்னுடைய ஆட்ட முறை என்றால் என்ன?” என்று எதிர்கேள்வி எழுப்பினார்.அதன்பின் அவர் தொடர்ந்துப் பேசும்போது “நாங்கள் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்களைக் கொண்டுள்ளோம்.நீங்கள் சொல்வது போல் நாங்கள் குறைவாக ரன்கள் எடுத்திருந்தாலும்,அதிர்ஷ்டம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை” என்றார்.

அந்த பத்திரிக்கையாளர் “நான் உங்களை விமர்சிக்கவில்லை” என்று விளக்கம் அளிக்க முயன்றாலும்,ஸ்டீபன் பிளெமிங் கோபமாக “நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்.இது முட்டாள்தனமான கேள்வி” என்று கூறினார்.

இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.