வெள்ளலூர் குப்பை கிடங்கு வழக்கு நிலுவையில் நிலையில், குப்பை கிடங்கு வளாகத்தில் தெரு நாய் கருத்தடை மய்யம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் உயிரி எரிவாயு கலன் (BIO GAS PLANT) அமைப்பதற்கு பரிசீலனையில் உள்ளது என்றும் விரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தின் 03/10/2018 உத்தரவின்படி குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யவேண்டும் அதுபோல் ஏற்கனவே தேக்கிவைக்கபட்டுள்ள குப்பைகளை BIO MINING என்ற முறையில் அழித்து
நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தங்களது வாரியம் 31/03/2019 தேதிக்கு பிறகு வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016ன் படி கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குப்பை கிடங்ககில் திடக்கழிவு மேலாண்மை செய்ய அனுமதி வழங்கவில்லை. ஆகவே இந்த உயிரி எரிவாயு கலன் அமைப்பதற்கு தங்களது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்வதோடு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குப்பை கிடங்கு வளாகத்தில் தெரு நாய் கருத்தடை மையம் அமைக்க பூமி பூஜை நடந்துள்ளது.
மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் இந்த மையத்தை செயல்படுவதற்கு தங்களது வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், குப்பை கிடங்கின் அருகில் மாடு அறுவை மய்யம், குப்பை கிடங்கு வளாகத்தில் கோழி கழிவுகள் எரிப்பு மய்யம் ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன,
இன்றைய தேதி வரை வழக்கு எண்: 127/2022 விசாரணை பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே வழக்கு முடிவுக்கு வரும் வரை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் எந்த ஒரு புது திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.