Categories: தமிழகம்

‘மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு…தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை’: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தார். அனைவருக்கும் வளையல் அணிவித்து, மாலை அணிவித்து, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று நடத்திவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி அறிக்கையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக சமுதாய வளைகாப்பு 300 பெண்களுக்கு தற்பொழுது நடைபெற்றது. பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங் கப்பட்டது.

தமிழ்நாட்டில் பழுதடைந்த 10,030 பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மட்டுமல்லாமல் ஆய்வுகூடம், சமையல் கூடம் கழிவறை உள்ளிட்ட அனைத்தும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

பள்ளிப் பேருந்தை இயக்க வேண்டும் என்றால் அதற்காக தனியாக அரசாணை உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றி தான் பேருந்து இயக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், இரண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும், இதை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார். மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரி செய்ய பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் 2 இலட்சம் மாணவர்களுக்கு 1100 ஆசிரியர்கள் மூலம் கவுன்சில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

7 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

9 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.