புதுச்சேரியில் 6 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றது இருப்பினும் நகரப்பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை
புதுச்சேரியில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையே டைமிங்க் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 நாட்களாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப்பிரியங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டைமிங் விவகாரம் குறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே நடந்த தகராறில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை தாக்கியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இருப்பினும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதத்தில் செயல்பட்ட 12 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் சேவை படிப்படியாக இயக்கப்படுகின்றது.
ஆனால் நகரப்பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.