நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிகை ஆனந்தி நடித்துள்ள ராவணக் கோட்டம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்
இந்த நிலையில் இராவண கோட்டம் திரைப்படத்தில் மறைந்த முதல்வர் காமராஜர் பற்றி தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக நாடார் சமுதாய அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ராவணக் கோட்டம் திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என தென்மாவட்ட நாடார் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் அச்சுதானந்த நாடார் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராவணக் கோட்டம் திரைப்படத்தில் காமராஜர் பற்றியும் நாடார் சமுதாயம் பற்றியும் இழிவாக பேசி உள்ளனர்.
காமராஜர் ஆட்சியில் தான் கருவேலம் மரங்களை விதைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் தான் கருவேலம் மரங்களை கொண்டு வந்தனர். அப்போது சிலிண்டர் அடுப்புகள் இல்லாததால் விறகுகளை எரிப்பதற்காக ஆங்கிலேயர்கள் கருவேலை மரங்களை விதைத்தனர்.
ஆனால் காமராஜர் தான் கருவேல மரங்களை விதைத்தார் என்று சொல்வது மிக கீழ்த்தனமான செயல். எனவே ராவண கோட்டம் திரைப்படம் வெளிவந்தால் நாடார் சமுதாயம் சார்பில் அனைத்து மக்களும் திரண்டு திரையரங்கை முற்றுகையிடுவோம்.
எதற்கெடுத்தாலும் நாடார் சமுதாயத்தை குறை கூறுகின்றனர் ராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தெரிவித்தார் பேட்டியின்போது சிங்கை முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.