விழுப்புரம் : தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் சதீஷ் (வயது 23). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்பான மத்திய அரசின் 3 மாத காலமான பட்டைய படிப்பான Deen dayal Upadhyay Gramin Kaushalya Yojana படிப்பை அக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
ஆத்தூர் அருகே உள்ள சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு கல்லூரி விடுதிக்கு. திரும்பியுள்ளார். விடுதியில் தன்னுடன் தங்கி உள்ள அறை நண்பர்களுடன் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது.
இன்று காலை சதீஷ் வகுப்பிற்கு செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். வகுப்பு முடிந்து மதியம் அவரது அறைக்கு திரும்பிய நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில் லுங்கியால் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனே இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி மற்றும் போலீசார் இறந்த சதிஷின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சதீஷின் செல்போனை கைப்பற்றி அதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.