தமிழகம்

3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி சிக்கியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சுப்பையா பிள்ளை தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் அழகு மணிகண்டன்(20), இவர் சிறுகனூர் அருகே உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும் இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி என்ற பிரிவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டேட்டா சயின்ஸ் குரூப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அழகு மணிகண்டன் அவர் படிக்கும் அதே வகுப்பில் ஒரு மாணவியுடன் நெருங்கி நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின் காலப்போக்கில் அழகு மணிகண்டன் அந்த மாணவியை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். மேலும் தன் காதலை அந்த மாணவியிடமும் தெரிவித்தார்.

அப்போது மாணவி அழகு மணிகண்டனிடம் கல்லூரி படிப்பை முடித்தவுடன் இதை பற்றி பேசி கொள்வோம் என்று கூறி சென்றுள்ளார்.

அதன்பின் மாணவி அழகு மணிகண்டனுடன் பேசாமல் விலக முயற்சிக்க செய்து ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் செல் போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

மேலும் விடுமுறை முடிந்த பின் திங்கட்கிழமை மீண்டும் கல்லூரிக்கு வந்த அழகு மணிகண்டன் அந்த மாணவியிடம் ஏன் பேச மறுக்கிறாய் செல்போன் நம்பரை பிளாக் செய்து உள்ளாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மாணவி மணிகண்டனிடம் கூறுகையில் உன்னிடம் பேச பிடிக்கவில்லை என்னை காதலிப்பதை நிறுத்திவிடு என கூறி திட்டிவிட்டார்.

இதனால் அன்று முழுவதும் மன உளைச்சலில் இருந்த அழகு மணிகண்டன் நேற்று மீண்டும் கல்லூயிக்கு வந்து அந்த மாணவியிடம் தன்னிடம் பேசும் மாறும் காதலிக்கு மாறும் கதறி அழுதுள்ளார்.

மேலும் பேசவில்லை என்றால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். அதன்பின்னும் அந்த மாணவி பேசாமல் இருந்ததால் அழகு மணிகண்டன் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் அழகு மணிகண்டன் கண்டு சக மாணவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுவனூர் போலீசாருக்கு தகவல் அளித்தன தகவலின் அடிப்படையில் சிறுவனூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு கொணலை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுபவித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்தனர். பின்னர் உடலை மீட்டு அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சிறுவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களக்கிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.