Categories: தமிழகம்

‘உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யணும்’: எம்.பி. கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்..!!

கோவை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோவையில் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி சிறப்பாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. எளிதில் அணுகக்கூடிய மற்றும் சுறு சுறுப்பான முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.

பிற மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்ற எக்ஸிட் போல் முடிவுகளை வைத்து தீர்மானிக்க முடியாது. தேர்தல் முடிவுகளை வைத்து தான் தீர்மானத்திற்கு வரமுடியும். உக்ரைன் நாட்டில் சிவகங்கை தொகுதியில் இருந்து மட்டும் 30 மாணவர்கள் சென்றுள்ளனர். இதுவரை 13 பேர் தான் வந்துள்ளனர். அந்த நாட்டில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவு, அதே நேரத்தில் இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு சீட் குறைவாக உள்ளது.

படிக்க முடியாமல் இந்தியா வரும் மாணவர்களுக்கு வேறு நட்பு நாடுகளிலாவது மருத்துவ சீட் வாங்கிக் கொடுக்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். மேலும், அந்த மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும். ரஷ்யா-உக்ரை போர் விவகாரத்தில் என் பார்வை வித்தியாசமாக உள்ளது. போர் நடக்கக்கூடாது அப்பாவி மக்கள் கொல்லக்கூடாது. ஆனால் ரஷ்யா தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். உக்ரைன் வாதம் மட்டுமே பேசப்படுகிறது.

கோவையில் இருந்து சென்ற மாணவன் அங்கு இராணுவத்தில் இணைந்துள்ளார். இதே அப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சென்று இப்படி செய்தால் ஜிகாதி என்பார்கள். இதுவே உக்ரைனுக்கு சென்றால் நல்லது என்று ஆகாது.உக்ரைன் ஒரு கிறிஸ்தவ நாடு. அங்கு சென்று மாணவர்கள் ராணுவத்தில் இணைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சசிகலா இல்லாத அதிமுக தோற்றுக் கொண்டே இருக்கிறது. அதிமுக.,வுக்கு வாக்கு வங்கி உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பு இல்லை என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இரட்டை தலைமையில் அதிமுக செழிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பொருளாதாரத்தை திறம்பட நடத்த இந்த பா.ஜ.க அரசுக்கு தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது ஏற்க முடியாது. பொதுத்துறை விற்பனை அதானி குடும்பத்திற்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

எங்கள் கட்சி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ளது. எங்களுக்கு தலைமை இல்லை துணிச்சல் இல்லை என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் எம்.எல்.ஏ எம்.என் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், கோவை 69 வார்டு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

7 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

8 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

8 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

9 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

9 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

10 hours ago

This website uses cookies.