அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி அருந்திய 5 மாணவியர் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மொத்தம் 14 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஈராசிரியர் பள்ளியான இதில் டேவிட் என்பவர் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை பள்ளியில் அரிசி உப்புமா மற்றும் சாம்பார் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
இதனை அருந்திய 8 மாணவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டது இதில் உணவுகளை பரிசோதித்ததில் சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது
இதனை தொடர்ந்து கார்த்திகா, மதுஸ்கா, மகிஷா, ஈஸ்வரமூர்;த்தி, ரோகிணி, தரணிகா, மித்ரன், விஸ்வா ஆகிய 8 பேரும் உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.