வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்த நிலையில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
மேலும் இதர மாவட்டங்களான கரூர், சேலம், கோயம்புத்தூர், கடலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் சுமார் நித்திய குமார், ஷோபனா, கோகுல் நந்தினி, சுவேதா, சங்கரி, தமிழரசி உள்ளிட்ட 13 மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ சிவக்குமார் அரசு மருத்துவமனையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவ மாணவிகள் கூறுகையில் காலை 7 மணி அளவில் வகுப்புகள் தொடங்க படுவதாகவும் காலை உணவு ஒன்பது முப்பது மணி அளவில் கொடுக்கப்படுவதால் பசியில் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தனர்
மேலும் இதுகுறித்து ஆர்டிஓ விடம் கேட்டபோது இது சம்பந்தமாக வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்லூரியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
உணவு வழங்க தாமதமானதால் மாணவ மாணவிகள் பசியில் மயங்கி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.