ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (37) ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சிவகாமி (32), வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ (10) என்ற மகளும், அஸ்வந்த் (8) என்ற மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்க: அஜித்திடம் அத்துமீறிய ரசிகர்.. கடுப்பான AK.. வைரலாகும் வீடியோ!!
முன்தினம் இரவு பணி முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சசிக்குமார், சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்று தூங்கினார். ஆனால்,翌நாள் காலை 8 மணிக்கும் மேல் அவர் அறை கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த சிவகாமி கதவை திறந்தபோது, சசிக்குமார் மின் விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த சிவகாமி திடுக்கிட்டு அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சசிக்குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்தவர்கள், சசிக்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சசிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சசிக்குமார் தற்கொலைக்கு காரணமாக குடும்ப தகராறா, பணிச்சுமையா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.