Categories: தமிழகம்

திமுக பிரமுகர் வீடு மீது அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு…. பின்னணியில் பிரபல ரவுடி!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன்(38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று மாலை ஜெகனின் வீட்டுக்கு 2 இரு சக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர்.

இந்த நாட்டுவெடி குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திமுக பிரமுகர் ஜெகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய அதே நபர்கள், சிறுணியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது கார் மற்றும் தண்ணீர் கேன் வாங்க வந்தவர்களின் கார்களையும் அரிவாளால் வெட்டி, வீட்டின் ஜன்னல்களை அரிவாளால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றனர்.

இதேபோல, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டை வீசிய அந்த கும்பல், சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி டியோ கார்த்திக் என்பவர் தான், அவரது 3 கூட்டாளிகளுடன் அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து டியோ கார்த்திக்கின் செல்போன் எண்ணின் டவர் லொகேஷனை ஆய்வு செய்த போது, திருத்தணி அருகே ஆந்திர எல்லையில் இருப்பது தெரியவரவே, தனிப்படை காவல் துறையினர் ஆந்திர எல்லையில் முகாமிட்டனர்.

தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது, செல்போன் எண் அணைக்கப்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து செல்போன் லொகேஷனை கண்டறிந்த தனிப்படை காவல் துறையினர் ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக் (21), குதிரை சுரேஷ் (21) மற்றும் குண்டு கோபி (25) ஆகிய 3 பேரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சோழவரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேரில் 3 பேரை கைது செய்துள்ள சோழவரம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவங்கள் நடந்ததா எனவும், ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான பொருள் சப்ளை செய்வோரிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசினார்களா எனவும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.