Categories: தமிழகம்

அடுத்தடுத்து மாற்றப்படும் அதிகாரிகள் : ஹாட்பாக்ஸ் அரசியல் தான் காரணமா?

கோவை : கோவையில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது, திமுக.,வின் ஹாட்பாக்ஸ் மற்றும் பணப்பட்டுவாடாவுக்கு உடந்தையாக இல்லாததால் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரச்சாரம் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன்படி, திமுக வேட்பாளர்களும் பல்வேறு விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் இருந்து ஆட்களை வரவழைத்து இங்கு தேர்தல் பணி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், வார்டுக்கு வார்டு ஹாட்பாக்ஸ்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

பிரச்சாரத்திற்குச் செல்லும் திமுக வேட்பாளர்கள் தங்கள் வார்டில் உள்ள மக்களுக்கு ஹாட்பாக்ஸ் மற்றும் அதனுள் பணமும் வைத்து விநியோகத்தை தொடங்கியுள்ளனர். இந்த விநியோகத்தை மேற்கொள்வது கரூரில் இருந்து இறங்கிய உடன் பிறப்புகள் என்று கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஹாட்பாக்ஸ் கொடுக்கும் நபர் யார் என்பது கூட தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரின் வீட்டிற்கு ஹாட்பாக்ஸ் செல்ல ஆங்காங்கே பிரச்சனைகள் வெடிக்கின்றன. பிரச்சாரம் தொடங்கியது முதல் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் பெட்டி பெட்டியாக ஹாட்பாக்ஸ்களை அதிமுகவினர் பிடித்து தேர்தல் பார்வையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதிகாரிகளும் அவற்றை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

இப்படி பறிமுதல் செய்வதாலோ என்னவோ கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து மாற்றப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்டத்துக்கான தேர்தல் கண்காணிப்பு அதிகாரியாக மரியம் பல்லவி பல்தேவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு இருந்தார்.

பணிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே அவர் மாற்றப்பட்டார். மேலும், கோவை மாவட்டத்திற்கு புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி அவர் அவர் விடுமுறையில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஹர் சகாய் மீனாவுக்கு பதிலாக பவன்குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர் பணிக்கு வந்ததும் அடுத்தடுத்து திமுக.,வினர் விநியோகிக்க இருந்த பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தன. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 2 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றிய நிலையில் தற்போது அவரையும் தூக்கியடித்துள்ளது திமுக அரசு.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புதிய தேர்தல் கண்காணிப்பு அலுவலராக கோவிந்தராவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பண விநியோகத்தை சில கட்சிகள் பிரச்சாரம் முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படி பணம் விநியோகத்தின் போது இந்த அதிகாரியும் முறைப்பு காட்டினால் இவரும் மாற்றப்படுவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

13 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

13 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

13 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

14 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

15 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

15 hours ago

This website uses cookies.