Categories: தமிழகம்

அடுத்தடுத்து மாற்றப்படும் அதிகாரிகள் : ஹாட்பாக்ஸ் அரசியல் தான் காரணமா?

கோவை : கோவையில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது, திமுக.,வின் ஹாட்பாக்ஸ் மற்றும் பணப்பட்டுவாடாவுக்கு உடந்தையாக இல்லாததால் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரச்சாரம் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன்படி, திமுக வேட்பாளர்களும் பல்வேறு விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் இருந்து ஆட்களை வரவழைத்து இங்கு தேர்தல் பணி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், வார்டுக்கு வார்டு ஹாட்பாக்ஸ்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

பிரச்சாரத்திற்குச் செல்லும் திமுக வேட்பாளர்கள் தங்கள் வார்டில் உள்ள மக்களுக்கு ஹாட்பாக்ஸ் மற்றும் அதனுள் பணமும் வைத்து விநியோகத்தை தொடங்கியுள்ளனர். இந்த விநியோகத்தை மேற்கொள்வது கரூரில் இருந்து இறங்கிய உடன் பிறப்புகள் என்று கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஹாட்பாக்ஸ் கொடுக்கும் நபர் யார் என்பது கூட தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரின் வீட்டிற்கு ஹாட்பாக்ஸ் செல்ல ஆங்காங்கே பிரச்சனைகள் வெடிக்கின்றன. பிரச்சாரம் தொடங்கியது முதல் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் பெட்டி பெட்டியாக ஹாட்பாக்ஸ்களை அதிமுகவினர் பிடித்து தேர்தல் பார்வையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதிகாரிகளும் அவற்றை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

இப்படி பறிமுதல் செய்வதாலோ என்னவோ கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து மாற்றப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்டத்துக்கான தேர்தல் கண்காணிப்பு அதிகாரியாக மரியம் பல்லவி பல்தேவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு இருந்தார்.

பணிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே அவர் மாற்றப்பட்டார். மேலும், கோவை மாவட்டத்திற்கு புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி அவர் அவர் விடுமுறையில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஹர் சகாய் மீனாவுக்கு பதிலாக பவன்குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர் பணிக்கு வந்ததும் அடுத்தடுத்து திமுக.,வினர் விநியோகிக்க இருந்த பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தன. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 2 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றிய நிலையில் தற்போது அவரையும் தூக்கியடித்துள்ளது திமுக அரசு.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புதிய தேர்தல் கண்காணிப்பு அலுவலராக கோவிந்தராவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பண விநியோகத்தை சில கட்சிகள் பிரச்சாரம் முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படி பணம் விநியோகத்தின் போது இந்த அதிகாரியும் முறைப்பு காட்டினால் இவரும் மாற்றப்படுவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.