கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவரை கடத்த நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் காரை மறித்து, கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கரூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
நாகம்பட்டி பாலம் அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நான்குக்கு மேற்பட்ட வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் வாகனத்தை மறித்து கார் கண்ணாடியை உடைத்தனர்.
முன்னாள் அமைச்சர் உடன் வந்த கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிக என்பவரை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று மதியம் 2 மணிக்குள் துணைத் தலைவர் தேர்தல் முடிவடைவதால் வேட்பாளரை கடத்தியதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர் காரில் அழைத்து வந்தவரை கடத்திச் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.