கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவரை கடத்த நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் காரை மறித்து, கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கரூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
நாகம்பட்டி பாலம் அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நான்குக்கு மேற்பட்ட வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் வாகனத்தை மறித்து கார் கண்ணாடியை உடைத்தனர்.
முன்னாள் அமைச்சர் உடன் வந்த கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிக என்பவரை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று மதியம் 2 மணிக்குள் துணைத் தலைவர் தேர்தல் முடிவடைவதால் வேட்பாளரை கடத்தியதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர் காரில் அழைத்து வந்தவரை கடத்திச் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.