வேலூர் : திருமண நிச்சயதார்த்தம் செய்த வேலூரை சார்ந்த மென்பொறியாளர் புதுப்பெண்ணுடன் புதுச்சேரிக்கு வந்த புதுமாப்பிள்ளை திடீர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். சென்னையில் மென்பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணான இளவேனில் என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதலை ஏற்ற பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
கடலூர் சாலையில் உள்ள நோனங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் 2 ம் தேதி கடற்கரைக்குச் சென்று விட்டு விடுதியில் இரவு தங்கிருந்தபோது, காலை 9 மணியளவில் ரமேஷுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 4.30 மணி அளவில் ரமேஷ் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தினருடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார் இளவேனில். பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமண நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய உள்ள நிலையில் சுற்றுலா வந்த புதுமாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.