திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி.
இதில் குணாளன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் குணாளனின் முதல் மனைவி தனலட்சுமி வயது 70 மற்றும் அவருடைய மகள் மஞ்சுளா வயது 40. இவர்கள் இருவரும் மகன் பாபு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனலட்சுமிக்கு பக்கவாத நோய் இருந்து வருகிறது மேலும் அவருடைய மகள் மஞ்சுளாவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
இதன் காரணமாக தனலட்சுமி மற்றும் அவருடைய மகள் மஞ்சுளா ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாபு தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு ஆதிச்சபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விசேஷத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தாய் தனலட்சுமி மற்றும் மகள் மஞ்சுளா ஆகிய இருவரும் தனியாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டை திறந்து பார்த்த பொழுது இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
அதனையடுத்து இருவரது உடலையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரது தற்கொலைக்கும் மன உளைச்சல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.