திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி.
இதில் குணாளன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் குணாளனின் முதல் மனைவி தனலட்சுமி வயது 70 மற்றும் அவருடைய மகள் மஞ்சுளா வயது 40. இவர்கள் இருவரும் மகன் பாபு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனலட்சுமிக்கு பக்கவாத நோய் இருந்து வருகிறது மேலும் அவருடைய மகள் மஞ்சுளாவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
இதன் காரணமாக தனலட்சுமி மற்றும் அவருடைய மகள் மஞ்சுளா ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாபு தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு ஆதிச்சபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விசேஷத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தாய் தனலட்சுமி மற்றும் மகள் மஞ்சுளா ஆகிய இருவரும் தனியாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டை திறந்து பார்த்த பொழுது இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
அதனையடுத்து இருவரது உடலையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரது தற்கொலைக்கும் மன உளைச்சல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.