Categories: தமிழகம்

சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ : நூலிழையில் எஸ்கேப் ஆன ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் : சாலையோரம் நிறுத்தப்பட்ட கர்நாடகா மாநில இளைஞரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம், சி.ஆர்.பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ஸ்டெட் (வயது 36 ). இவர் இசை ஆசிரியராக கர்நாடகாவில் பணி செய்து வருகிறார்

இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் திருமணம் செய்துள்ளார் அவரது மனைவி வீடான பட்டிவீரன்பட்டியில் கடந்த மூன்று மாதங்களாக (மனைவியின் பிரசவத்திற்காக) தங்கி உள்ளார். இதனிடையே திண்டுக்கல் ஆர்.எம் காலணியில் 80 அடி பிரதான சாலையில் உள்ள பிரபல உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சிக்கு வந்து செல்கிறார்

வழக்கம்போல இன்று உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி செய்ய வந்த ரமேஷ் 80 அடி சாலையில் சாலை ஓரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கார் எஞ்சினில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் புகை அதிகமாகி தீ பற்றியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர் எனினும் காரின் எஞ்சின் பகுதி மற்றும் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருந்ததால் காரின் மின் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது நின்று கொண்டிருந்த கார் திடீரென தீபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

10 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

1 hour ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.