கோவையில் இரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கெமிக்கல் வெடித்து சிதறும் பரப்பான காட்சி வெளியாகியுள்ளது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் ஆர்பிகே இரசாயன (கெமிக்கல்) தொழிற்சாலை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த கெமிக்கல் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ அங்கு இருந்த இரசாயனம் முழுவதும் பரவி மல மலவென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த இரண்டு கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறியது.இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமாகியது.
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.