திருப்பூர் : பல்லடம் அருகே ஓடும் காரில் தீ விபத்தில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70) தனது மனைவி ராஜேஸ்வரியுடன் காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மாருதி ஆல்டோ காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கார் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளயம் அருகே சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் திடீரென புகை மூட்டத்துடன் தீ மளமளவென ஆரம்பித்தது.
இதனை கண்ட சுப்பிரமணியம் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தனது மனைவி ராஜேஸ்வரியை காரில் இருந்து அவசர அவசரமாக இறக்கி கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.
பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்தையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தால் கார் முற்றிலும் எரிந்து எழும்புக்கூடு போல் காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் அதிர்ஷ்ட வசமாக கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.