புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் காணப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறை உள்ளது. இந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது இதனையடுத்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றம் முழுவதுமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் புகைவந்த இடத்திற்கு சென்றபோது அங்கு திமுக எம்.எல்.ஏ கென்னடி அறையின் குளிர்சாதன பெட்டி தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து தீ பரவாமல் உடனடியாக தீயை அணைத்தனர், முதற் கட்ட விசாரணையில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது என தீயனைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்,
மேலும் இந்த குளிர்சாதன பெட்டியை மாற்ற கோரி பல முறை சட்டபேரவை செயலரிடம் கூறியும் இன்னும் மாற்றப்படாமல் இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீடிர் தீ விபத்து காரணமாக சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.