மின் கசிவு காரணமாக எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சமீபத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் செல்வது வழக்கம். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு தினமும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்த நிலையில் இரவு அரக்கு பகுதியில் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 24 பயணிகள் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
அவர்கள் பயணித்த பேருந்து விஜயநகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.
எனவே பேருந்து டிரைவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பேருந்து முழுவதுமாக எரிய துவங்கியது. எனவே பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி உயிர்த்தப்பினார்.
ஆனால் பயணிகளின் உடைமைகளும் தீக்கிரையாகி விட்டன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகி விட்டது.
தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.