மின் கசிவு காரணமாக எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சமீபத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் செல்வது வழக்கம். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு தினமும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்த நிலையில் இரவு அரக்கு பகுதியில் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 24 பயணிகள் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
அவர்கள் பயணித்த பேருந்து விஜயநகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.
எனவே பேருந்து டிரைவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பேருந்து முழுவதுமாக எரிய துவங்கியது. எனவே பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி உயிர்த்தப்பினார்.
ஆனால் பயணிகளின் உடைமைகளும் தீக்கிரையாகி விட்டன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகி விட்டது.
தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.