ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு.. குழந்தைக்கு பெயர் சூட்டிய ராகவா லாரன்ஸ் : செல்பி எடுக்க கூட்டம் திரண்டதால் பரபரப்பு..!!
பிரபலங்கள் தங்கள் ரசிகர்களைப் பொதுவெளியில் சந்திக்க செல்லும் போது அவர்கள் மீதுள்ள அன்பால் புகைப்படம் எடுக்க நெருங்கிச் செல்வார்கள். அப்போது கூடும் கூட்டத்தால், தள்ளுமுள்ளு, அடிதடி என பல அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி2’ பட விழாவில் ஒரு சம்பவம் ஏற்பட்டது.
அதாவது, சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் காண சென்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனக் கூறி நடிகர் ராகவா லாரன்ஸூம் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார். இதுபோல அவரைச் சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் மாட்டி இறந்து இருக்கிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நேரடியாக சென்று ரசிகர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள விழுப்புரத்தில் இருந்து தொடங்குகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.
அதன்படி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று ரசிகர்களுடன் போட்டோ ஷூட் எடுத்து கொண்டார் அப்போது பலர் இடம் நான் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து கொள்ள வந்துள்ளேன் வேறு ஒன்றுமில்லை என்றார்.
பின்னர் அனைத்து ரசிகர்கள் உடனும் அவர்கள் குடுப்பத்தினர் உடன் போட்டோ எடுத்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கு லாவண்யா என பெயர் சூட்டி அந்தக் குழந்தைக்கு குங்குமம் போட்டு வைத்து ஆசீர்வதித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.