பிரதமர் வருகையின் போது திடீர் சாலை மறியல்.. மோடியை பார்க்க விடாமல் தடுக்க திமுகவினர் நடத்திய நாடகம் : பாஜக குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், அந்த கோவிலில் வழிபாடு செய்யும் ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சாயல்குடி காவல்துறை பாரபட்சமாக ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மேலும் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பதாக கூறியும், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
குறிப்பாக,சாயல்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சல்மோன் என்பவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மணி நேரமாக சாலை மறியல் போராட்டமானது நடந்தது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் அணிவித்து நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று வந்துள்ள நிலையில், தற்போது நடந்த இந்த சாலை மறியல் போராட்டமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அங்கு வந்த கடலாடி வட்டாட்சியர் போராட்டம் நடத்திய பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி சாலையில் நடந்த இந்தப் போராட்டத்தால், பிரதமர் மோடியை வரவேற்க ராமேஸ்வரம் செல்வதற்காக பாஜகவினர் செல்லும் வழியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால், கட்சியினரின் வாகனங்களும் தேங்கி நின்றன.
திட்டமிட்டே திமுக அரசு மோடியை பார்க்க விடாமல் தடுப்பதற்காக இந்த போராட்டத்தை இரண்டு மணி நேரமாக நீடிக்க விட்டதாக கட்சியினர் முனுமுனுத்தபடியே அங்கிருந்து கடந்து சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.