தந்தையை கொலை செய்ததாக 15 வயது மகன் கைது செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கூண்டோடு சிக்கிய கும்பல்… 6 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 12:47 pm
Murder Arrest - Updatenews360
Quick Share

பழனி அருகே 5 மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கொலை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஓமந்தூரார் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மகன் கிரி விஷ்ணுவால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரே கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூரரின் தந்தை ரங்கசாமி புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதனை அடுத்து தீவிர விசாரணை செய்யப்பட்டதில் ஓமந்தூரார் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு பேர் விசாரணை செய்ததில் ஐந்து பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து ஏற்கனவே ஓமந்தூராரின் 15 வயது மகன் கிரிவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது மனைவி உறவினர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 569

0

0