குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது பாப்புலராக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சமூக வலைதளங்கள்தான். அதுவும் மாடல், நடிகைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படம் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தங்கள் வலையில் விழ வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிய செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர்தான் கண்மணி சேகர். செய்தி வாசிப்பாளர்கள் தற்போது சினிமாவில் சுலபமாக நுழைய சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றி வருகிறது.
அந்த வகையில் பிரபலமானவர் கண்மணி சேகர். இவரின் ரியாக்ஷனுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை. அவருடைய முக பாவனை, வித விதமான உடைகள் என ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் மூழ்கி வலைபோட்டு கண்மணியின் புகைப்படங்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது அவரது திருமணம் குறித்துதான். சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்த தகவல் நமக்கு தெரியவிட்டாலும், நவீன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலில் நாயகானாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் முதன்முதலாக மலையாளத்தில் Money Return என்ற படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் Expect the Unexpected என்று பதிவிட ரசிகர்கள் என்னவாக இருக்கும் என காத்திருந்த நிலையில், நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் சந்தோஷமாக இருந்தாலும் , கண்மணியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனராம். செய்தி வாசிப்பாளர்கள் எல்லாம் சினிமாவில் நுழைந்தநிலையில், கண்மணி சேகர் மட்டும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இப்போது அவருக்கு திருமணம் என்றதும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.