தமிழகம்

வான வெடி காட்டிய SRH வீரர்கள்..கதிகலங்கிய RR பவுலர்கள்..சம்பவம் செய்த இஷான் கிஷன்.!

SRH-ன் அதிரடி ரன் மழை

2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மெகா ஸ்கோரை அடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.300 ரன்களை அடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கிய அவர்கள்,14 ரன்கள் குறைவாக 286/8 என்ற அபார ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தனர்.

இதையும் படியுங்க: ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க…ரஜினிகாந்தின் வைரல் வீடியோ.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.தொடக்கத்திலிருந்தே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் அதிரடி காட்டி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை எட்டியது.

துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 47 பந்துகளில் 106 ரன்கள் விளாசி,11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடித்தார்.நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்கள்,ஹெய்ன்ரிச் கிளாஸன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தனர்.இறுதியில் 20 ஓவர்களில் 286 ரன்களை குவித்தனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் நின்றனர்.இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி,ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.