தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் அவர் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்த படத்திற்கான அப்டேட் வர துவங்கியுள்ளது.
அதே போல தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
அவர் அடுத்ததாக ‘ரெண்டகம்’ என்ற படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினிகாந்த் இணையும் படத்தில் அரவிந்த் சாமி எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இருப்பினும், நடிகரின் மெளனமே சம்மதம் என ரசிகர்கள் கருதுகின்றனர். 31 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமியை ஒன்றாகப் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ என்ற கேங்ஸ்டர் படத்தில் சகோதரர்களாக நடித்தனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.