தமிழகம்

பல கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த அமைச்சரின் ஆதரவாளர்.. நோட்டீஸ் ஒட்ட சென்ற வழக்கறிஞர்களுக்கு கொலை மிரட்டல்!

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரிமில் தொழிற்சாலை. இந்த இடம் “தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்” நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்துவருகிறது.

இந்தநிலையில், தனியார் விளம்பர நிறுவனத்தின் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்டது. இந்த இடத்தை பொருட்காட்சி நிர்வாகத்தினர் சுத்தம்செய்து வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், கே.கே.நகரை சேர்ந்த திமுக வர்த்தக அணியைச் சேர்ந்த நிர்வாகியான, செந்தமிழ்செல்வன் என்பவர் சபரிமில்லுக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் இடத்தினை தனது அடியாட்களுடன் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளார்.

சபரிமில் நிர்வாகத்தினர் கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தும், ஆளுங்கட்சியினர் என்பதாலும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனிடையே, திமுக நிர்வாகியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் சபரி மில்லுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை திமுக நிர்வாகி தனது அடியாட்களுடன் சென்று மிரட்டல் விடுத்ததுடன் கதவை பூட்டிவிட்டு, யாரும் வெளியே செல்லமுடியாது என அனைவரும் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.

இதனையடுத்து அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திமுக நிர்வாகி மற்றும் அடியாட்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுதொடர்பாக இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையரிடம் சபரிமில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்தபிறகு, நிலஅபகரிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைத்தும் தனிக்குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

இது அமைச்சர் தலையிட்டால் நல்லது இல்லை என்றும் நிர்வாகத்தை மிரட்டுவதாகவும், திமுக ஆட்சியில் தற்போது வரை சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், அனைத்து ஆவணங்கள் கையில் இருந்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல திட்டமிட்டு ஆக்கிரமித்து அபகரித்துவிட்டனர் என்றும், உடனடியாக போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அபகரித்து உள்ள இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.