தமிழகம்

’தமிழக அரசு மதிக்கவில்லை’.. செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்!

நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம் என செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியாகி, மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரை பதில் மனுதாரராக அளித்து பதில் தர உத்தரவிட்டு உள்ளது.

மேலும், அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்தார். தற்போது அவர் அமைச்சராகி உள்ளதால், வழக்கில் தாக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது” என வாதத்தை முன் வைத்தார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்துத் துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: முதல்முறையாக களத்தில் எதிர்ப்பு குரல் தெரிவித்த தவெக.. தமிழக அரசு உத்தரவாதம்!

மேலும், “செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது? கடந்த முறை பதில் சொல்கிறோம் எனக் கூறியதால் தான் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், தற்போது வரை தமிழக அரசு எந்தவொரு பதிலும் தரவில்லை.

நோட்டீஸ் வேண்டாம் என மாநில அரசின் உத்தரவாதம் அடிப்படையில், உத்தரவை மாற்றினோம். நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம்” என நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ஏ.ஜி. மாஸி அமர்வு கோபமாக தெரிவித்தது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.