‘பொன்னியின் செல்வன்’ கதைய இன்னும் நீங்க படிக்கலயா?: 3 நிமிஷம் போதும்..நாவல் உலகின் மாஸ்டர் பீஸ் கதைய தெரிஞ்சுக்கலாம் இதோ…!!

தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி, பல்கலைக்கழகம், மூல நூல் எல்லாமே பொன்னியின் செல்வன் தான்.

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒன்று. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் காலத்தில், ஆளும் குடும்பத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டம், ஆட்சி செய்யும் பேரரசரின் வாரிசுகளுக்கு இடையே வன்முறை பிளவுகளை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி, பல்கலைக்கழகம், மூல நூல் எல்லாமே பொன்னியின் செல்வன் தான். அதற்குப் பிறகு தமிழில் வெளிவந்த அத்தனை வரலாற்று நாவல்களுக்கும் ஒரு பென்ச்மார்க் பொன்னியின் செல்வன் தான்.

சோழ வம்சத்தில் புகழ்பெற்ற பேரரசான ராஜராஜ சோழன் என்று அறியப்படும் அருள்மொழி வர்மர் காலத்தில் நடக்கும் கதை. கிட்டத்தட்ட 10ம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் வந்தியத்தேவன், ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழர், அவரின் சகோதரி குந்தவை, சகோதரர் ஆதித்தர் கரிகால் சோழன், அநிருத்த பிரம்மராயர், நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் பல கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சோழர் ஆட்சிக்காலத்தையே நம் கண்முன் கொண்டு வந்து அத்தனை கதாபாத்திரங்களையும் விரிவாக சொல்லியிரப்பார் கல்கி. வரலாற்றுச் சம்பவங்களோடு புனைவையும் கலந்து வெரைட்டி காட்டப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன், தமிழ் நாவல் உலகின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து பாகங்களாகவும் ஆயிரம் பக்கங்களுக்கு மேலாகவும் பிரமாண்டமாக விரியும் படைப்பு இது. அவ்வளவு பெரிய கதையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

தன்னுடைய சகோதரி குந்தவைக்கும், தந்தை சுந்தர சோழருக்கும் காஞ்சியில் இருந்து வந்தியத்தேவனிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். வந்தியத்தேவனின் இந்தப் பயனத்தில் சோழ சாம்ராஜ்யத்தை கவிழ்க்க நடக்கும் சூழ்ச்சியை அறிந்துகொள்கிறார்.

இருவரிடமும் கடிதம் கொடுத்த பிறகு குந்தவை, ஈழத்தில் இருக்கும் அவருடைய இளைய சகோதரர் அருள்மொழிவர்மனுக்கு பொன்னியின் செல்வனுக்கு வந்தியத்தேவன் மூலமாக ஒரு தகவலை அனுப்புகிறார். பூங்குழலியின் படகில் ஈழத்தை அடையும் வந்தியத்தேவன், அருள் மொழி வர்மரிடம் குந்தவையின் தகவலைச் சேர்க்கிறார். அருள் மொழி வர்மரை, குந்தவையின் வேண்டுகோள்படி வந்தியத்தேவன் தஞ்சைக்கு அழைக்க, பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு அழைக்க, ஆழ்வார்க்கடியான் ஈழத்திலேயே இருங்க என சொல்ல குழப்பத்தில் இருக்கிறார் அருள்மொழி வர்மர்.

இந்தக் குழப்பங்களுக்கு இடையில் பழுவேட்டரையர் வீரர்கள் இளவரசரை சிறை செய்ய ஒரு கப்பலில் வர, அவர்களிடம் வந்தியத்தேவன் சிக்க, இளவரசர் அவரை மீட்க இன்னொரு கப்பலில் செல்ல சரியான நேரம் பார்த்து புயல் வர, அந்தப் புயலில் இரு கப்பல்களும் சிக்க, புயலிலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் மீண்டு கடலில் இளவரசரும் வந்தியத்தேவனும் மிதக்க, பூங்குழலி அவர்களை கரையேற்றுகிறாள்.

புயலில் இருந்து மீண்டவரை நோய் தாக்க, அருள்மொழி வர்மருக்கு நாகையில் புத்தவிகாரையில் சிகிச்சை நடைபெறுகிறது. இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவ, அரசவையைக் கைப்பற்றும் சூழ்ச்சியில் இருந்து மீளும் வரை இளவரசரை தலைமறைவாக இருக்கும் படி குந்தவை கட்டளையிடுகிறார். இன்னொருபுறம் பாண்டிய ஆபத்துதவிகள், நந்தினி, சபலப்பட்ட சிற்றரசர்கள் என ஒரு எதிர்ப்புரட்சிப் படை சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக உருவாகும் சதித்திட்டத்தை முறியடிக்க அருள்மொழிவர்மர் யானை மீதேறி வந்து சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துவார்.

சூழ்ச்சியை ஓரளவுக்கு அறிந்த வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுக்கிறார். அவர் முயற்சி வீணாக, ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், கந்தமாறன் அனைவரும் கடம்பூர் மாளிகைக்குச் செல்கிறார், இறுதியில் ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்திக்கிறார்.

மந்தாகினி தேவி சாயலில் இருக்கும் நந்தினி, அதைப்பயன்படுத்தியே சுந்தரச் சோழரைக் கலக்கத்திலேயே வைத்திருக்க, இந்த சதியை முறியடிக்க மந்திரி அநிருத்தர் மந்தாகினியை தஞ்சைக்கு அழைத்து வர முயற்சிக்க, சில பல குழப்பங்களுக்குப் பிறகு பூங்குழலி மந்தாகினி தேவியின் இடத்தில் இடமாறி வர, மந்தாகினி தேவி அரசர் சுந்தர சோழரை சந்திக்கிறார். ஒரே நாளில் அரசரையும், இளவரசர்களையும் படுகொலை புரிய இருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் பெரிய பழுவேட்டரையருக்குத் தெரிய வர, சுந்தர சோழரை மாந்தாகினி தேவி உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார்.

சதித்திட்டத்தில் அருள் மொழிவர்மர் தப்பிக்கிறார், ஆதித்தர் பலியாகிறார், பழியோ வந்தியத்தேவன் மீது. மக்களின் ஆதரவுடன் அருள் மொழிவர்மர் முடிசூட, வந்தியத்தேவன் தன் மீதான பழியைத் துடைத்தெறிய முற்றுபெறுகிறது பொன்னியின் செல்வன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

14 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

15 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

15 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

16 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

17 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

17 hours ago

This website uses cookies.