கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் யானைகள் அட்டகாசம் செய்து மனித உயிரிழப்பு, காயம், விவசாய நிலங்கள் சேதம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எஸ் பி வேலுமணி, கடந்த வாரம் கோவை நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம் பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, விவசாய நில வேலியையும், வாகனங்களையும் சேதப்படுத்தியதோடு, விநாயகர் கோவில் அருகில் இருந்த 90 வயது முதியவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.
இச்சம்பவம் தனிப்பட்டதல்ல என்றும், தொடர்ந்து நடைபெறும் யானை அட்டகாசங்கள் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.
வனப்பகுதிக்குள் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்படாததால் யானைகள் கிராமங்களுக்குள் வந்து சேதம் விளைவிக்கின்றன என்றும், இதனைத் தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மின்வேலி அமைப்பது, உருக்கு கம்பிவேலி போடுவது, வனத்துறையில் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், வனத்துறைக்கு ரோந்து வாகனங்கள், டார்ச் லைட்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ள குழு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஆய்வுக்கு வர இருப்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கருத்துகளை அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.